தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

31.8.14

படிநிலை 1 முதல் 3 வரை.....

ஊத்தங்கரை தொடக்கப்பள்ளியில் தான் எனது கல்விப் பயணம் தொடங்கியது. எல்லோரையும் போல் என்னையும் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி ஐயர் காதை தொட்டுக்காட்டச் சொல்லித்தான் சேர்த்தக் கொண்டார். அப்போது உதவித்தலைமையாசிரியராக பரமசிவம் அவர்கள் இருந்தார். 

மூன்றாம் வகுப்பு வரை நடந்த நிகழ்வுகள் எண்ணை தேய்த்த காகிதத்தில் தெரியும் பிம்பம் போல தெளிவற்றதாக இருக்கின்றது. சில ஆசிரியர்களின் பெயர்கள் மட்டும் நினைவில் இருக்கின்றது. ஆசிரியைகள் யசோதா , வசந்தா ,  மாரியம்மாள் , சரஸ்வதி, வனசுந்தரி, மும்தாஜ் , போன்றவர்கள் தான் நினைவில் நிற்கின்றார்கள்.

ஒருமுறை இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது நடந்த நிகழ்வு மட்டும் நினைவில் நிழலாடுகின்றது. அப்போது மாலை நேரங்களில் பள்ளி முடிவதற்கு முன் உடற்பயிற்சியாக எகிறி குதிக்கவேண்டும். இவ்வாறு குதிக்கும் பொது பல்பத்தினை மூக்கில் வைத்து விளையாடிக் கொண்டே குதித்த போது பல்பம் உள்ளெ சென்று விட்டது. அதன் பிறகு மருத்துவர் ஜனார்தனம் அவர்களிடம் சென்று ஏதோ ஒரு கருவி மூலம் அதை எடுத்து விட்டார்.

அடுத்த பதிவில் இருந்து நினைவோடு நின்ற , இன்றளவும் நிற்கின்ற மனிதர்களைப்பற்றியும் , பல சுவையான நிகழ்வுகளையும் பகிர்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக