நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பின் வகுப்பாசிரியர் செல்வி.புவனேஸ்வரி அவர்கள்.
வீட்டில் ஒரு அம்மா இருப்பதைப் போல் , பள்ளியில் நினைத்துக் கொள்ளும் அளவிற்கு அன்பான ஆசிரியை . நாங்கள் தான் இவரது முதல் மாணவர்கள் என நினைக்கின்றேன்.இந்த இரண்டு வகுப்புகளில் படிக்கும் போது நினைவில் நின்ற நண்பர்கள் பழனிச்சாமி (தற்போது முட்டை வியபாரம் செய்யும் திருமலையின் அண்ணன், ஓசூரில் பணிபுரிகின்றான்) . வெங்கடேசன் (செங்கல் வரதன் என்று அன்போடு அழைக்கப்படும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராஜன் அவர்களின் மூத்த மகன், தற்போது மணடல அளவிலான பொறியியல் துறையில் மூத்த அதிகாரி) , செந்தில்நாதன் (விரிவுரையாளர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) , சிங்காரவேலன் ( முன்னாள் பேரூராட்சித்தலைவர் பரமசிவன் அவர்களின் மகன்) , வழக்கறிஞர் சரவணன் ஆகியோர்தான். இந்த பதிவை பார்வையிடும் எனது 4 மற்றும் 5 வகுப்பறை தோழர்கள் இருந்தால் கோபம் கொள்ளாமல் உங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டுகின்றேன். அதிலும் குறிப்பாக என் வகுப்பறை தோழிகளை பற்றி இங்கே குறிப்பிடவில்லை. பின்பு ஒருமுறை அவர்களை பற்றி பகிர்கின்றேன்.
அறிவியியலில் தாவரங்கள் வேர் மூலம் நீரை கடத்துகின்றன என்பதை வகுப்பறையில் , ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி , அதில் சிவப்பு நிற மை ஊற்றி அதிலே உடனடியாக பிடுங்கிய ஒரு சிறு செடியை போட்டார். பிறகு சில மணிநேரங்களுக்கு பின் தாவரத்தின் தண்டுப்பகுதியில் சிவப்பாக தெரிந்த நரம்புகளை காட்டிய காட்சிதான் இன்றளவும் எனது அறிவியல் ஆர்வத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது.
ஒருமுறை எனது அம்மா கையில் சூடு வைத்த போது ( இதை பற்றி விரிவாக பின்னர் விளக்குகின்றேன்), தொடர்ந்து மூன்று நாள் கையில் பர்னால் வைத்து பராமரித்த அன்பு மிகுந்த ஆசிரியர் . இதனால் தான் இன்று என் மாணவ , மாணவிகளிடம் அதே அன்பை என்னால் காட்ட முடிகின்றது.
இன்னும் எழுதகின்றேன் இவரை பற்றி நாளை.....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக